நீங்கள் எங்களை வைத்து நிதியை பெறுகிறீர்கள் : வீதியில் நிற்கும் நாங்கள் பழியை ஏற்கிறோம்

வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு உதவுவதாக சொல்கிக்கொண்டு இங்கே வருகிறவர்கள் ஒரு உள்ளக பொறிமுறைக்கு போங்கள் என எங்களிடம் சொல்கிறீர்கள். அதை சொல்ல தான் அங்கிருந்து விமானம் ஏறி இங்கு வருகிறீர்களா? என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு காந்தி புங்காவில் இன்று புதன்கிழமை காலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவனர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கடந்த மாதம் காந்தி புங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவி அமலநாயகி தெரிவித்திருந்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்