
நாவலப்பிட்டி – பூண்டுலோயா பிரதான வீதிக்கு பூட்டு
சீரற்ற காலநிலை காரணமாக நாவலப்பிட்டி – பூண்டுலோயா பிரதான வீதியின் ஹரங்கல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடும் மழை காரணமாக வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தற்போது அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
