நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்

வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று புதன் கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

இந்தநிலையில் அவர் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.