நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

இலங்கையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ, கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.