நத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு வெளிநாட்டிலிருந்து நத்தார் பண பரிசு கிடைத்ததாகக் கூறி அவரிடம் இருந்து இரு தடவைகளில் 30,000, மற்றும் 56,000 ரூபா பணத்தை சந்தேக நபர் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் போது, கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாட்டிலிருந்து நத்தார் பரிசு வந்ததாக அந்த பெண்ணிற்குச் சந்தேக நபர் அழைப்பு விடுத்துள்ளார் .

மீண்டும் சில நாட்களுக்கு அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்து பரிசாகக் கிடைத்துள்ள பணம் கருப்பு பணம் என கூறியுள்ளார்.

எனவே, கொடுத்துள்ள வங்கிக் கணக்கில் மேற்குறிப்பிட்ட பணத்தை வைப்பிலிட வேண்டும் . இல்லையெனில் ‘கறுப்புப் பணம் வைத்திருந்ததற்காகச் சிறை செல்ல வேண்டியிருக்கும்’ என சந்தேக நபர் குறிப்பிடப்பட்டுள்ளார் .

இதனையடுத்து இந்த பெண் பயந்து சந்தேக நபர் வழங்கிய வங்கிக் கணக்கிற்கு 30,000,56,000 ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளார் .

வைப்பிலிட்ட பிறகு பரிசி பொருள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காததால் இந்த பெண் கடந்த பெப்ரவரி மாதம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார் .

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரின் நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்