திருட்டு கும்பலை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை, சுன்னாகம் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

சுன்னாகம் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து, அங்கு பொருட்களை வாங்குவது போல பாசாங்கு செய்து, பல பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இக் குழு தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்