திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து : 51 பேர் காயம் 3 பேர் படுகாயம் (UPDATE)

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் – கங்கை பாலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 51ம் நபர்கள் காயமடைந்துள்ளதுடன் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த தனியார் பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.

காயமடைந்தவர்கள் மூதூர் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்