திருகோணமலையில் மீன்களை ஏற்றிச்சென்ற கெப் வாகனம் விபத்து

-மூதூர் நிருபர்-

திருகோணமலை புடவை கட்டுப் பகுதியில் மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமொன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்கு மீன்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டயர் வெடித்ததில் வாகனம் வீதியை விட்டு விலகி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாகனத்தை செலுத்திய சாரதி சிறு காயங்களுடன் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.