திருகோணமலையில் நீதி கோரி கண்டன போராட்டம்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-மூதூர் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதியில் இன்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்இ தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரியும் கண்டன போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கட்டைபறிச்சான் இறால் பாலத்தில் இருந்து பேரணியாக மூதூர் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது தாக்குதல் சம்பவத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும்இ கோசங்களை எழுப்பியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.