
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தீப் பற்றியதை அவதானித்த அருகிலுள்ள வர்த்தகர்கள் மின்சார சபை அலுவலகத்தில் அறிவித்ததை அடுத்து, அங்கு விரைந்து சென்ற இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மின்சாரத்தை உடனடியாகவே துண்டித்து, தீயை அணைத்தபின் மின்மானி அலகு பெட்டியை சீர்செய்து சுமார் நிமிடத்தில் மின்தடங்கலை சீர்செய்தனர்.
