திக்வா சூறாவளி – அவுஸ்திரேலியா இலங்கைக்கு நிதியுதவி

இலங்கையில் திக்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெண்களையும், சிறுமிகளையும் பாதுகாக்க அவுஸ்திரேலியாவும், ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியமும் கைகோர்த்துள்ளன.

சூறாவளியால் அதிகளவில் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களுக்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் 5 இலட்சம் அவுஸ்திரேலிய டொலரை வழங்க உறுதியளித்துள்ளது.

இந்த நிதியுதவி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புதல், உயிர்காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல், மற்றும் பாலின வன்முறைகளுக்கு எதிரான அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படவுள்ளது.