தயசிறியின் கட்சி உறுப்புரிமை வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தயசிறி ஜயசேகர பணியாற்றுவதற்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.