தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூரில் தாகசாந்தி நிலையம்

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை தியாக தீபம் திலீபன் நினைவாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு நல்லைக்கந்தனை நாடிவந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தணிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரால் கடந்த இரண்டு வாரங்களாக நல்லூர் கந்தசுவாமி கோவில் பின் வீதியில் உள்ள தியாக தீபம் நினைவுத்தூவி புனரமைக்கப்பட்டு, சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு, தியாக தீபம் திலீபன் உருவப்படத்துடன் பதாகை காட்சிப்படுத்தி இவ்வாறு தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டு அடியவர்கள் உள்ளம் குளிர வைக்கப்பட்டது.

இதேவேளை, தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தலைமையில், தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு நேற்று காலை 06. 45 மணியளவில் தியாகி திலீபன் நினைவாலயத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் முக்கிய உறுப்பினர்கள், யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24