தந்தை தூக்கில் தொங்குவதை வீடியோ எடுத்த 4 வயது மகன்

இந்தியா-ஆந்திராவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவரின் தங்கை பொலிஸில் அளித்த முறைப்பாட்டிற்கு பிறகே இந்த சம்பவம் தெரிய வந்தது.

உயிரிழந்த ஷேக் ஜமால் என்பவர் தனது 3 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

அவரின் மனைவி குவைத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. ஷேக் ஜமால் நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கு முன்பு அவரின் தந்தை மாதர் சாஹேப் உயிரிழந்ததில் இருந்து அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷேக் ஜமால் தனது மகனை அழைத்து  தான் தூக்கில் தொங்குவதை செல்போனில் படமாக்கும் படி கூறியுள்ளார்.

அவர் கூறியபடியே 4 வயது மகனும் தந்தை தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்து செல்ல  இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்