சில பாடசாலைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை!

 

சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்றும் மற்றும் நாளையதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும், நாளையதினமும் மூடப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்