சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

கண்டி – பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதுருவெல முஸ்லிம் காலனியைச் சேர்ந்த 25 வயது கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் விவசாய பிரிவில் நியமிக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தப்பிச்சென்ற சந்தேக நபரை கைது செய்ய பல்லேகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.