சிறுவர் பூங்காவிலிருந்து 170 வெடி குண்டுகள் மீட்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்த நிலையில் அதன் ஒரு பகுதியாக அண்மையில் பூங்காவில் குழி தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மோப்ப நாய் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது 170  வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மொத்த எடை  500 கிலோ கிராம் ஆகும்.

இதனையடுத்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.