
சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.
இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமிற்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
