
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 50,000 ரூபா வழங்க வேண்டும் என நீதி மன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி சிவனேசதுரை சந்திரகாந்தன் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
இதேவேளை வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், வழக்குத் தாக்கல் செய்த சிவனேசதுரை சந்திரகாந்தன் வழக்கு செலவினமாக எதிர்த்தரப்புக்கு 50,000 ரூபா வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இவ்வழக்கின் அடுத்த தவணை ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விவகாரம் தொடர்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்