சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யமும் மீனவ பிரதிநிதிகளும் இணைந்து தொடர் பரப்புரை

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பான பரப்புரை கோப்பாய் தொகுதியில் அதி தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் தலமையில் இடம்பெற்றுவரும் பரப்புரையில் வட மாகாண மீனவ அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்துள்ளனர்.

நேற்று காலை முதல் பிற்பகல் 6:00 மணிவரை குறித்த பரப்புரை கோப்பாய் பகுதியிலும், வட்டுக்கோட்டை பகுதியிலும் இடம் பெற்றுவருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்