சனீஸ்வர விரத உற்சவத்தின் இரண்டாவது வார உற்சவம்

-யாழ் நிருபர்-

வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் புரட்டாசி சனி வாரத்தின் இரண்டாவது வார உற்சவம் இன்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

வசந்தமண்டபத்தில் இருந்து அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள், சீதேவி, பூமாதேவி உள்ளிட்ட பரிவாரதெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதணைகள் இடம்பெற்று புரட்டாசி சனி விரதத்தின் சனீஸ்வர உற்சவம் இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு இ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் கலந்துகொண்டு உற்சவ கிரியையினை நடாத்திவைத்தனர். கடந்த 23.09 அன்று சனிக்கிழமை முதலாவது சனீஸ்வர உற்சவமும், 07.10,  மூன்றாம் சனீஸ்வர உற்சவம்,14.10 அன்று நான்காம் சனீஸ்வர உற்சவத்துடன் இனிதே நிறைவடையும்.

பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டதுடன் எள்தீபமெந்தி தமது நேர்த்திவிரத கடமைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்