சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியால் வடமராட்சி வடக்கு மீனவர்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழில் மீன்பிடி இடம்பெற்றுவருவதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டைக்காடு மீனவர்கள் அதிகளவானோர் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவதால் அதிகளவான சிறிய மீனினங்கள் பிடிக்கப்படுவதாகவும், அம் மீனினங்கள் இறந்த நிலையில் மீண்டும் கடலில் கொட்டப்படுவதாகவும், இதனால் தற்போது சிறு மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் நேற்று வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும் அதற்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி, இவ்வருடமும் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.