கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய பொங்கல் விழா

மட்டக்களப்பு கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொங்கல் விழா இடம்பெற்றது.

கால்நடை உற்பத்தி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கால்நடை உற்பத்தி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜே.தேவசகாயம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் போது விருந்தினர்களால் அரிசி பொங்கல் பானையில் இடப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டதுடன் கோமாதா பூஜை இடம்பெற்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இதன்போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நதீர் கலந்து கொண்டதுடன் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிபணிப்பாளர் எம்.ஏ.ஹாதி, மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பரிசோதகர் வைத்தியர் விவேக்கா கிஷாந்தன், கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்