கேழ்வரகு பயன்கள்

கேழ்வரகு பயன்கள்

கேழ்வரகு பயன்கள்

🟤🟠நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. இன்றோ காணக்கிடைக்காத அரிய தானியமாக மாறிவிட்டது. மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்தவகையில் கேழ்வரகு சிறுதானியத்தின் பயன்களைப் பார்ப்போம்.

  1. கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
  2. கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
  3. கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள்  குணமாகும்.
  4. கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
  5. கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
  6. கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும். அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது.
  7. கேழ்வரகில் நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிபினால்கள் அதிகம் இருப்பதால் சர்க்கரை அளவை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அரிசி , கோதுமை அல்லது மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கேழ்வரகில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.
  8. ஒரு கப் கேழ்வரகில் சுமார் 16.1 கிராம் நார்ச்சத்து அளிக்கிறது. இந்த நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கும். கேழ்வரகில் கரையாத நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் எளிதாகும், மலச்சிக்கல் நீங்கும்.
  9. உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்றாகும்.ஒரு கப் முழு ராகி மாவு ( 144 கிராம்) சுமார் 10.3 கிராம் புரதத்தை அளிக்கிறது.
  10. கேழ்வரகு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும் , இதில் கால்சியம் , இரும்பு சத்து மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து தாதுக்களுடன் தாய்ப்பாலை வளப்படுத்துகிறது. இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் பால் சுரக்க கேழ்வரகையும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கேழ்வரகு பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்