
குறைக்கப்பட்டுள்ள விலைக்கு அமைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை
அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குறைக்கப்பட்டுள்ள விலைக்கு அமைய சில பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
