குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் அலுவலகத்தில் திருட்டு

கோனாபொல பிரதேசத்தில் உள்ள குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் அலுவலகத்தில் இருந்து கருத்தடை பொருட்களை நபர் ஒருவர் திருடியுள்ளார்.

குறித்த அலுவலகத்திற்கு அருகிலேயே மதுபானக் கடை ஒன்று உள்ளதாகவும், மது அருந்த வந்த நபரே இந்தத் திருட்டைச் செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்