
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படாமல் விட்டால், எதிர் காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை உருவாகும், எனவே கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து செயற்பட அனைத்து கட்சிகளும் முன் வரவேண்டும், என கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்..வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட, கிழக்கு தமிழர் கூட்டமைப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில், படகு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள், சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது
இதில் கலந்துகொண்ட கருணா அம்மான் உரையாற்றுகையில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 👇🏻👇🏻👇🏻