கிளிநொச்சி பொதுவைத்தியாசாலையில் பணி பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி பொதுவைத்தியாசாலையில் இன்று வியாழக்கிழமை மருத்துவப்பணியாளர்கள் கதிர் இயக்கப்பிரிவினர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதன்படி இன்று வியாழக்கிழமை காலை 8 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை வழக்கமான வேலைக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைவாகவே இந்த பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உத்தேச ரியுஏ (TUA) இன் போது, “உண்மையான அவசரகால சூழ்நிலைகளுக்கு” அவசரகால சேவைகளை மட்டுமே பராமரிக்க எஸ்ஜிபி (SGP) முடிவு செய்துள்ளது, அத்தகைய சேவை பின்வரும் விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் மட்டுமே கிடைக்கும்.

1. இந்த சேவை ஒரு தன்னார்வ சேவை அவசியம், ரியுஏ காலத்தில் நோயாளிகளின் உயிருக்கு ஏற்படும் எந்த ஆபத்துக்கும் எஸ்ஜிபி பொறுப்பேற்காது.

2. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தோன்றும் அவசரநிலைகளுக்கு மட்டுமே இந்தச் சேவை கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

3. இந்த தன்னார்வ சேவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தோன்றினால், அதைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொதுவைத்தியாசாலையில் பணி பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி பொதுவைத்தியாசாலையில் பணி பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி பொதுவைத்தியாசாலையில் பணி பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி பொதுவைத்தியாசாலையில் பணி பகிஸ்கரிப்பு