-யாழ் நிருபர்-
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியை சேர்ந்த 55வயதுடைய பெண்ணே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவே தர்மபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் மற்றும் தடையப் பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.ஜே.திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.