கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பொது சுகாதார பரிசோதகர்களினால்  கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம். அஜித் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் வைத்திருந்த கோழி இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

கோழி இறைச்சி கடைகளில் குளிர்சாதனப் பெட்டியின் குளிர் நிலைமையும் பரிசோதனை செய்யப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் ஏனைய இறைச்சி கடைகளும் பரிசோதிக்கப்படும் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் மேலும் தெரிவித்தார்.