காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கி லிதுவேனியா நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி பயணித்த கப்பல் ஒன்று காலி துறைமுகத்திற்கு பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வந்த போது குறித்த நபர் துறைமுகத்தில் இறங்க முற்பட்ட வேளையில் கடலில் தவறி விழுந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்