காலாவதியான பொருட்களை விற்ற பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது,  திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் விலைத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடி உரிமையாளர் இனங் காணப்பட்டார்.

இதனையடுத்து, பல்பொருள் அங்காடி  உரிமையாளரிற்கு எதிராக 20 குற்றச்சாட்டுகளுடன் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 18.03.2024ம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொண்ட மேலதிக நீதவான் செ.லெனின்குமார், பூட்சிற்றி உரிமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு 150,000 ரூபா தண்டம் விதித்ததுடன், உரிமையாளரிற்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்