காதல் உறவால் தகராறு: ஒருவர் பலி

கொழும்பில் நேற்று சனிக்கிழமை காதல் உறவால் ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெசாக் வலயத்தை பார்ப்பதற்காக தனது நண்பர்கள் சிலருடன் ஒருகொடவத்தை நோக்கி பயணித்த வேளையில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் தாக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் இழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்