
கோவிந்தன் கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் களியாட்டங்களில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான், நான் மக்களுக்காக சேவை செய்கிறேன், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சாணக்கியன் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து 60 கோடி ரூபாய் பணம் பெற்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்திருந்தார்
அவரது கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வைத்து நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்க பாராளுமன்ற உறுப்பினரான கருணாகரம் அவர்கள் தனது ஊடக சந்திப்பில் ரணிலிடம் இருந்து சாணக்கியனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம் என்று விமர்சித்திருந்தார்,நான் அவர் போல் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு சேவை ஆற்றாமல் தனது சொந்த தேவைகளுக்காகவும் களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் லண்டனில் உல்லாசமாக கழிக்கவில்லை.
அவர் லண்டன் நேர சயன நிலையில் இருந்து தற்போதுதான் மட்டக்களப்பு நேர முழிப்புக்கு வந்துள்ளார், நான் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவன், அவர்களின் வரிப்பணமே அவர்களின் அபிவிருத்திக்கான பணமாக கிடைக்கப்பெற்றுள்ளது, எனது பக்கட்டுக்களை நான் நிரப்பவில்லை.
எனது மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதியிடம் இருந்து பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 60 கோடி ரூபாவை பெற்றேன் , நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்தேன், எனது தேர்தல் விஞ்ஞாபனம் கூட உரிமை சார்ந்த அபிவிருத்தி என்றே அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுடன் நேரடியாக பயணிக்கின்றமையினால் அவர்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவே ஜனாதிபதியிடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெற்றேன்.
அத்துடன், மக்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஆளுமை என்னிடம் உள்ளது, அதற்கமையவே 60 கோடி ரூபாய்கான வேலைதிட்டத்தின் பட்டியலை சமர்பித்து 60 கோடி பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மக்களுக்காக பெற்றேன், என தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
