கதிர்காம யாத்திரீகர் ஒருவர் மட்டு மாமாங்கம் ஆலயத்தில் சடலமாக மீட்பு!

 

 

 

கதிர்காமத்திற்கு சந்நிதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்த யாத்திரிகர் ஒருவர் இன்று திங்கட்கிழமை ஆலையத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 6ம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரை யாழ். சந்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்த நிலையில் அக் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்து.

பாதயாத்திரிகள் ஆலய வளாகத்தில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையில் குறித்த நபர் பணிஸ் உண்ட பின்னர் அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிலத்தில் சரிந்து வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சடலமானது பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்