கதிரையில் அமர்ந்திருந்தபடி உயிரிழந்த நபர்

 

அனுராதபுரம் புதிய நகரில் தேவை நிமித்தம் மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் ஒருவர் அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

நீண்ட நேரமாக கதிரையில் உறங்கி கொண்டிருந்த நபரை அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தமை தெரிந்தது.

பின்னர் பொலிஸார் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உடல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .