கண்டெய்னரில் பதுங்கியிருந்து நாடுவிட்டு நாடு தப்பிச் செல்ல முயன்ற 175 பேர் மீட்பு!

மெக்சிகோவில் கண்டெய்னர் காரில் பதுங்கி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 175 பேரை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கன்டெய்னரில் பதுங்கியிருந்த 175 அகதிகளை மெக்சிகோ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு மெக்சிகோவின் சியாபாஸில் உள்ள எல்லை சோதனைச் சாவடியில் சோதனையின் போது இந்த குழு கண்டெய்னரின் பின்புறத்தில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அகதிகள் குழு அமெரிக்கா செல்வதற்காக இவ்வாறு மறைந்துள்ளனர், அவர்கள் குவாத்தமாலா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.

மேலும், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் பெற்றோர் இல்லாத 28 குழந்தைகள் அதில் இருந்தனர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

லத்தீன் அமெரிக்காவில் நிலவும் வறுமை மற்றும் மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்தோர் தொடர்ந்து மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்