கண்டி – கொழும்பு பிரதான வீதியினுடான போக்குவரத்துக்கு மீள ஆரம்பம்

கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளால் வீதி மூடப்பட்டிருந்தது.

வீதி நேற்று (3) மாலை முதல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் அந்த வீதியூடாக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.