கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினால் நான்கு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 கோடி 50 லட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த 4 பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 57 வயதுடைய தொழிலதிபர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர், விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்த பின்னர், இந்தக் கும்பலின் மற்ற 3 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு வெல்லம்பிட்டியவை சேர்ந்த 45 வயது கணவருடன் 42 வயது மனைவியும், கொழும்பு – 15 இல் வசிக்கும் ஒரு தொழிலதிபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.