கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள் மீட்பு

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள் மீட்பு மாத்தறை – மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணும் ஆணும், நேற்று செவ்வாய்க்கிழமை பகல் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.

உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மிகுந்த முயற்சியுடன் அவர்களை மீட்டு, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

பங்களதேஷை சேர்ந்தவர் 31 வயதுடையவரும், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 20 வயதுடையவருமே இவ்வாறு அலைகளில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.