
கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
அம்பலாந்தொட்டை பகுதியில் மாணவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
தர்மபால மாவத்தையை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த மாணவன் கடலில் மூழ்குவதைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக அவரை மீட்டு ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதும் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
