ஓடுபாதையில் பற்றி எரியும் விமானம் : ஜப்பானில் பரபரப்பு

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் உள்ள விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.

விமானம் இன்னும் எரிந்து கொண்டிருப்பதாகவும், பயணிகளை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.