-யாழ் நிருபர்-
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் பாவனைக்காக வைத்திருந்த பொருட்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 3600 மில்லிகிராம் ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள், அதனைப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகங்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்