ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு கொதடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொதடுவ பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொதடுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 12 கிராம் 550 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொதடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்