
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.
“பரமேஸ்வரி, என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் அதில் எழுதப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
