ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனாரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றார்

-பதுளை நிருபர்-

ஊவா மாகாண 24ஆவது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன இன்று வியாழக்கிழமை பதுளையில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

2000 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் கண்காணிப்பாளராக பொலிஸ் துறையில் இணைந்த அவர், முன்னதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றினார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மகேஷ் சேனாரத்ன, குற்றவியல் சட்டம் மற்றும் சமூகவியலில் முதுகலைப் படிப்புகளை நிறைவு செய்துள்ளார்.

தென் மாகாணத்தில் பணியாற்றிய காலத்தில், தென் மாகாணத்தில் பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்கு நடடிக்கைகளை செயல்படுத்தினார்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் ஊவா மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் பிற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதும் மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதும், குற்றச்செயல்களை குறைக்காமல் அவற்றை ஒழிப்பதே தனது நோக்கம் எனவும் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.