
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கடுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெவாகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவலை – ஹேவாகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவலை பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பின் போது குறித்த சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
