
உணவு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் கலாச்சாரங்களை இணைத்தல் நிகழ்வு
கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் உணவு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் கலாச்சாரங்களை இணைத்தல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச உணவு தின நிகழ்வு விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.வசந்தரூபா தலைமையில் இடம்பெற்ற.
இதன் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக நல்லிணக்க மையங்கள் சார்பில் உணவு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் கலாச்சாரங்களை எவ்வாறு இணைத்தல் தொடர்பில் உரையாடல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீ சற்குணராஜா இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜே.எம்.எஸ்.பி. ஜெயசுந்தர பணிப்பாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.கஜபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பொறியியல் பீடாதிபதி ஏந்திரி கே. பிரபாகரன் மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.



