உணவகத்தில் இருந்து 40 தோட்டாக்கள் மீட்பு

சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9எம்.எம் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த தோட்டாக்கள் நேற்று புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

உணவகத்தின் அறையொன்றில் உள்ள அலுமாரியின், சிறிய பெட்டியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.