இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல்
பாணந்துறை வேகட பிரதேசத்தில் நேற்றிரவு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காயமடைந்த இளைஞர் ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் தப்பி ஓடியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளி குறித்த இளைஞனை வாளால் தாக்கியுள்ளார். இதன் போது குறித்த இளைஞன் தலையில் பலமுறை அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்